பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

 

 

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன்

 

 

                உந்தனின் பலனை உந்தனின் கரத்தில்

                நன்றி நிறைந்த இதயத்தோடு

                இன்றுஅர்ப்பணம் செய்கின்றோம்

                ஏற்றுக்கொண்டருளும் பிதாவே -                பிள்ளைகள்

               

                 

தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே முன்னறிந்தவர் நீரே

பிரமிக்கதக்க அதிசயமாக உருவாக்கி மகிழ்ந்தீரே

கண்மணிபோல காத்து கொண்டீரே

கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே -                பிள்ளைகள்

 

பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு நீங்கள் இடம்கொடுங்கள் என்றீரே

அவர்களுக்கு தடைசெய்யாதிருங்கள் என்றுரைத்தவரே

இந்த பிள்ளை மேல் உந்தன் கரம் வையும்

ஆசிர்வதித்தென்றும் அரவணையும் -                             பிள்ளைகள்

 

ஞானம் வளர்த்தி கிருபை தயவால் ஆசிர்வதித்திடுமே

விருத்தியடைந்து பெருகிடச் செய்யும் உந்தன் கிருபையாலே

பெற்றோரை கனம்பண்ணி என்றும் கீழ்படிந்து

ஒலிவமரக் கன்றாய் வளரச் செய்யும்                                -              பிள்ளைகள்