பிள்ளைகள்
கர்த்தரால்
வரும்
சுதந்திரம்
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்
கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன்
உந்தனின் பலனை உந்தனின் கரத்தில்
நன்றி நிறைந்த இதயத்தோடு
இன்றுஅர்ப்பணம் செய்கின்றோம்
ஏற்றுக்கொண்டருளும் பிதாவே - பிள்ளைகள்
தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே முன்னறிந்தவர் நீரே
பிரமிக்கதக்க அதிசயமாக உருவாக்கி மகிழ்ந்தீரே
கண்மணிபோல காத்து கொண்டீரே
கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே - பிள்ளைகள்
பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு நீங்கள் இடம்கொடுங்கள் என்றீரே
அவர்களுக்கு தடைசெய்யாதிருங்கள் என்றுரைத்தவரே
இந்த பிள்ளை மேல் உந்தன் கரம் வையும்
ஆசிர்வதித்தென்றும் அரவணையும் - பிள்ளைகள்
ஞானம் வளர்த்தி கிருபை தயவால் ஆசிர்வதித்திடுமே
விருத்தியடைந்து பெருகிடச் செய்யும் உந்தன் கிருபையாலே
பெற்றோரை கனம்பண்ணி என்றும் கீழ்படிந்து
ஒலிவமரக் கன்றாய் வளரச் செய்யும் - பிள்ளைகள்